அரசு பஸ்சுக்குள் புகுந்து நொறுங்கிய ஆட்டோ 45 பயணிகள் உயிர் தப்பினர்




ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டு ஆற்றாங்கரை வழியாக பனைக்குளம் நோக்கி வந்தது. இந்த பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். ராமநாதபுரம் அருகே நதிப்பாலம் வளைவு சாலையில் பஸ் வந்தபோது, அந்த பகுதியில் ஒரு ஆட்டோவும் வந்தது. அரசு பஸ்சும், ஆட்டோவும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பஸ் முன்பகுதியின் அடியில் ஆட்டோ சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. அதன் மீது அரசு பஸ்சின் ஒரு பகுதி ஏறி நின்றது. மேலும் இந்த சம்பவத்தின்போது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பஸ் மோதியதால் அந்த மின்கம்பம் முறிந்து, அரசு பஸ்சின் மேற்பகுதியில் விழுந்து கிடந்தது. அதிர்ஷ்டவசமாக உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து நடப்பதை அறிந்த ஆட்டோ டிரைவர், பஸ்சில் மோதுவதற்கு முன்பே கீழே குதித்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அதே நேரத்தில் பஸ் பயணிகளும் உயிர்தப்பினர். இதுபற்றி அறிந்ததும் பனைக்குளம் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்று மின்கம்பத்தை அகற்றினர். புதிய மின்கம்பம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments