தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), புதுக்கோட்டை மாவட்டம்,அம்மா பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததானம் முகாம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), புதுக்கோட்டை மாவட்டம்,அம்மா பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததானம் முகாம், 18.06.2024 செவ்வாய் கிழமையன்று, தவ்ஹீத் மர்கஸில்  நடைபெற்றது.

இதற்கு, மாவட்ட   துணைச் செயலாளர் சேக் அப்துல்லா 
தலைமை வகித்தார்கள்.

இதில் கிளை தலைவர் சர்ஜுன்,செயலாளர் ஃபைரோஸ்கான், பொருளாளர் ஆதில் துணைத்தலைவர்   துணை செயலாளர் ஹுசைன், மருத்துவ அணி அனஸ் மாணவரனி நியாஃப் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இதில் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

 மருத்துவ தகுதி அடிப்படையில், 35 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும், மருத்துவர். ராதாகிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள். 

மேலும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர்  சபுயுல்லா அவர்கள் நன்றியுறை நிகழ்த்தினார்கள். 
அவர் கூறும்போது "ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்" 
என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்கள்.

இறுதியாக, இம்முகாமில் பங்களிப்பு செய்த, இரத்த வங்கி மேலாளர் மருத்துவர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் அவரது குழுவிற்கும், மேலும் இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை உறுப்பினர்கள், மாணவரணி, தொண்டரணி மற்றும்  கிளை நிர்வாகத்திற்க்கு  நன்றியினைத் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments