அபுதாபியில் காலமான வீரமங்கலம் குமார் கணேசன் உடலை தாயகம் அனுப்பித் தந்த தாய்ச்சபை அபுதாபி அய்மான் சங்கம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் வீரமங்கலத்தைச் சேர்ந்த குமார் கணேசன் இம்மாதம் 10ம் தேதி வேலை தேடி அமீரகத் தலைநகர் அபுதாபி வந்தடைந்தார்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக அமீரகம் வந்தடைந்த அடுத்த நாள் (ஜூன் 11ம் தேதி) மாரடைப்பால் காலமானார். மறைந்த குமார் கணேசனின் உடலை தாயகம் அனுப்பித் தருமாறு, குமார் கணேசனின் குடும்பத்தினரும் நண்பர்களும் அமீரகத் தாய்ச் சபை அய்மான் சங்கத்தை அணுகினர்.


மறைந்த உடலை சகோதரரின் தாயகம் அனுப்பவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு தமுமுக அபுதாபி மண்டல பொருளாளர் எமனேஸ்வரம் சர்புதீன் கேட்டுக்கொண்டதன் பேரில் அனைத்து தூதரகப் பணிகளையும் அய்மான் சங்கத் தலைவர் கீழக்கரை எச்எம் முகம்மது ஜமாலுதீன் ஆலோசனையின் பெயரில், மறைந்த குமார் கணேசனின் நண்பர் சென்னை இர்பான் தாஜுதீன் அவர்களுடன் இணைந்து தேவையான அனைத்துக் காரியங்களையும் அய்மான் சங்க நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் (விகிரி) நிறைவு செய்தார்.


அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து. நேற்று 21/06/2024 இரவு அபுதாபி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம்
திருச்சி விமான நிலையத்துக்கு மறைந்த சகோதரரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

மறைந்த குமார் கணேசனின் குடும்பத்தாரும் நண்பர்களும் தமது உளமார்ந்த நன்றிகளை அய்மான் சங்கத்திற்குத் தெரிவித்துக் கொண்டனர்.

அன்னாரின் இறுதிக் காரியங்களை நிறை வேற்றுவதற்கு உழைத்த பொதுச் செயலாளர் லால் பேட்டை அப்பாஸ் செயற்குழு ஆடுதுறை முஹம்மது மிஸ்பாஹி, உறுப்பினர்கள் முஹம்மது அனஸ், கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராஹிம், அம்பகரத்தூர் முஹம்மது கைசர், திருநெல்வேலி முகம்மது உசைன், கீழக்கரை சையது பாசில் அவர்களுக்கும், மேலும் அய்மான் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், குமார் கணேசனின் உடலை தாயகம் அனுப்புவதற்கான முழுச் செலவையும் ஏற்ற அபுதாபி இந்திய தூதரகத்திற்கும், மிகத் துரிதமாக முழு ஒத்துழைப்பு வழங்கிய அபுதாபி இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி பாலாஜி ராமசாமிக்கும் அய்மான் சங்கம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments