61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் புதுக்கோட்டை மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதேபோல் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்தனர்.
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் ஏற்றி படகில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், படகுகளுக்கு வர்ணம் தீட்டினர். இதேபோல் மீன்பிடிக்க தேவையான வலைகள் மற்றும் இதர சாதனங்களை புதுப்பித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன.
மீன்பிடி தடைக்காலத்தில் இப்பகுதியில் உள்ள சிறு குறு தொழில்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில்கள் முற்றிலும் பாதிப்படைந்தது. இதனால் மீனவர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றதால் இந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையே நேற்றுடன் மீன்பிடி தடைக்காலமும் நிறைவடைந்தது.
இதையடுத்து, புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வந்தனர். நேற்று காலை மீனவர்கள் தங்கள் படகுகளில் தண்ணீர், வலைகள், ஐஸ்கட்டி, டீசல் மற்றும் உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கடலுக்கு உற்சாகமாக சென்றனர். 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால் மீன்பிடி துறைமுகங்கள் விழாக்கோலம் பூண்டது. முன்னதாக படகுகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி கடல் மாதாவை மீனவர்கள் வணங்கினர். அதன்பிறகு ஒவ்வொரு படகுகளாக கடலுக்கு சென்றன. மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.