பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு!



பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் பெரும் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும். பொதுவாக அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை மற்றும் சமூக நலம் என பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களை கண்டறிந்து ஒவ்வொரு ஆண்டும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் 2025-ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்படி துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து, தகுதியான நபர்களாக இருந்து விருது பெற விருப்பம் உள்ள நபர்கள், இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்–ைதயும் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 04322 222270 மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments