கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர் முகம்மது இப்ராஹிம் - தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் பாராட்டினார்கள்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கோபாலப்பட்டினத்தை சேர்ந்த இப்ராஹிம் என்ற மாணவனுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூன் 28, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்தாண்டு இந்நிகழ்வு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்தாண்டு, இந்நிகழ்ச்சி இருகட்டங்களாக நடைபெறுகிறது. இதன் இரண்டாம் கட்டம் வரும் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் நாங்குநேரி சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்டு, 12-ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சின்னதுரையின் அருகில் அமர்ந்திருந்தார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சாதிக் பாட்சா அவர்களின் மகன் முகம்மது இப்ராஹிம் என்ற மாணவருக்கு தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து, சான்றிதழ்கள் & ஊக்கத்தொகையினை வழங்கி கௌரவித்து பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.