கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர் முகம்மது இப்ராஹிம் - தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் பாராட்டு



 
கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர் முகம்மது இப்ராஹிம் - தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் பாராட்டினார்கள்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கோபாலப்பட்டினத்தை சேர்ந்த இப்ராஹிம் என்ற மாணவனுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூன் 28, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்தாண்டு இந்நிகழ்வு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்தாண்டு, இந்நிகழ்ச்சி இருகட்டங்களாக நடைபெறுகிறது. இதன் இரண்டாம் கட்டம் வரும் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் நாங்குநேரி சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்டு, 12-ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சின்னதுரையின் அருகில் அமர்ந்திருந்தார்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற  கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சாதிக் பாட்சா அவர்களின் மகன் முகம்மது இப்ராஹிம் என்ற மாணவருக்கு தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து, சான்றிதழ்கள் & ஊக்கத்தொகையினை  வழங்கி கௌரவித்து பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments