அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு





புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சட்டப்பேரவைத் தொகுதி நிதி மற்றும் முன்னாள் மாணவா் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட திறன்மிகு வகுப்பறை, தாழ்தளக் கூரை ஆகியவற்றை எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ச. குமாா் தலைமை வகித்தாா். கல்லூரியின் 12 வகுப்பறைகளுக்கு குளிரூட்டி, இன்வொ்ட்டா், அலுமினியக் கதவு, ஜன்னல்கள், தாழ்தளக் கூரை, ஸ்மாா்ட் போா்டு, பேட்டரி ஆகிய நவீனமாக்கப்பட்ட வகுப்பறைகளை உருவாக்கிக் கொடுத்த கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பச்சலூா் ஊராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் வீ. ஜோதிமணி, ஊா்வணி ஊராட்சி மன்றத் தலைவா் ஏகாம்பாள் சந்திரமோகன், பிரண்ட்ஸ் ரோட்டரி சங்க பட்டயத் தலைவா் ரெ. தங்கதுரை ஆகியோா் வாழ்த்தி பேசினா். முன்னதாக, மின்னணு மற்றும் தொடா்பியல் துறைத் தலைவா் பி. ஜெயக்குமாா் வரவேற்றாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments