தனிநபர் பெயரில் 10 ‘சிம்கார்டு’கள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை புதிய சட்டம் அமல்.




உங்கள் ஆதார் நம்பரில் எத்தனை சிம் கார்டுகள் இணைப்பில் உள்ளது.? கண்டறிய எளிய வழி…
சிம் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நடப்பதால், ஒருவர் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ், நாடு முழுவதும் ஒருவர் தனது பெயர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே பயன்படுத்தலாம் என்றும், சில முக்கிய பகுதிகளில் இந்த அளவு இன்னும் குறைக்கப்பட்டுள்ளது என்றும், விதியை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்போன் எண்கள் மூலமாக பல மோசடிகளை செய்துவிட்டு, மோசடிக்குப் பயன்படுத்தும் சிம் கார்டுகளை தூக்கி எறிந்துவிட்டு புதிய சிம் கார்டுகள் மூலம் மோசடியை அரங்கேற்றும் மோசடிக் கும்பலை முடக்கவே, நாடு முழுவதும் ஒருவர் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தையும் பொருத்து, ஒருவர் பயன்படுத்தும் அதிகபட்ச சிம் கார்டுகளுக்கான வரைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவது என்னவென்றால், நாடு முழுவதும் ஒருவர் அதிகபட்சமாக தனது பெயரில் 9 சிம் கார்டுகள் வைத்திருக்கலாம். சற்று பதற்றமான ஜம்மு - காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்கலாம். முதல் முறையாக இவ்வாறு 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதுவே தொடர்ந்தால் ரூ.2 லட்சம் அளவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

இந்த சட்டம், அதிகபட்சமாக சிம் கார்டுகளை பயன்படுத்தினால் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யவில்லை என்றாலும், சிம் கார்டுகள் மூலம் தவறான செயல்களில் ஈடுபட்டால் அதற்கு சிறைத் தண்டனை விதிக்க வழிவகை இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒருவர் சிம் கார்டை தவறான பயன்பாட்டுக்காக வாங்கி, மோசடியில் ஈடுபட்டால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், சில வேளைகளில் இரண்டுமே விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றன என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் உள்ளது. ஒருவேளை, மோசடியாளர்கள் உங்கள் பெயரில் சிம் கார்டு பெற்றிருந்தால், அதனை அறிந்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தொலைத் தொடர்பு நிறுவனம், ஒரு சிறப்பு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறது. அதன் மூலம் ஒருவர் தனது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

https://sancharsaathi.gov.in/ என்ற இணைதயதளத்தில் சென்று உங்கள் பத்து இலக்க செல்போன் எண்ணை உள்ளிட்டால் அதற்கு ஒரு ஓடிபி வரும், அதனை பதிவு செய்த பிறகு, உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்தால், உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிம் கார்டுகள் விவரங்கள் தெரிய வரும்.

உங்கள் ஆதார் நம்பரில் எத்தனை சிம் கார்டுகள் இணைப்பில் உள்ளது.? கண்டறிய எளிய வழி…
உங்கள் ஆதார் எண்ணுடன் இணைப்பில் உள்ள மொபைல் எண்களை கண்டறிய மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று உரிய விவரங்களை கொடுத்து தெரிந்துகொள்ளலாம். 

டெல்லி: கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு புதிய தொலைதொடர்பு சட்டம் 2023ஐ அமல்படுத்தியது. இந்த சட்டதிருத்தத்தின் படி, தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு விதிகள் அமலுக்கு வந்தன. அதில் குறிப்பாக பயனாளர் ஒருவர் அவரது அடையாளத்தை கொண்டு 9 சிம்கார்டுகள் மட்டுமே வாங்கி கொள்ள முடியம்.

எத்தனை சிம் கார்டுகள் வாங்கலாம்.?

அதனை மீறினால் அபராதம் , அதன் மூலம் குற்றம் நிகழ்ந்தால் சிறை தண்டனை என கடுமையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் குறிப்பிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒருவர் பெயரில் சிம் கார்டு வாங்கும் எண்ணிக்கை 6ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிக சிம் கார்டுகள் வாங்கினால்.?

இந்த விதிமுறைகளை முதல் முறையாக மீறினால் 50,000 ரூபாய் வரையில் அபராதமும், அடுத்த முறை மீண்டும் மீறினால் 2 லட்ச ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதனை வைத்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை, 50 லட்ச ரூபாய் வரையில் அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம் என சட்டத்திருத்தம் அமலில் உள்ளது.

கண்டறியும் வழி :

இப்படியான சூழலில், உங்கள் அடையாள எண்ணை (ஆதார் எண்) கொண்டு எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய ஓர் எளிய வழியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக குறிப்பிட்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை கிழே காணலாம்…

மத்திய தகவல் தொடர்பு துறையின் sancharsathi.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அந்த பக்கத்தில்  உங்கள் மொபைல் எண்ணுடன் உள்ள தொடர்புகளை தெரிந்து கொள்ளுங்கள் எனும் Know your mobile Connections எனும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர், தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு கீழே காட்டப்பட்டு இருக்கும் எழுத்துக்களை (Captcha) டைப் செய்ய வேண்டும்.  பின்னர் உங்கள் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதனையும் உள்ளீடு செய்ய வேண்டும்.

அதன் பின்னர், உங்கள் மொபைல் எண்ணுடன் தொடர்பில் உள்ள ஆதார் எண்ணை கணக்கில் கொண்டு அதனுடன் இணைப்பில் உள்ள மொபைல் எண்களை நமக்கு காட்டும். அப்போது, நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்களை தவிர்த்து வேறு எண்கள் காட்டப்படுகிறதா என்பதை கவனித்து கொள்ளுங்கள்.
அவ்வாறு வேறு எண்கள் உங்கள் ஆதார் எண்ணுடன் தொடர்பில் இருந்தால் அதனை கிளிக் செய்து குறிப்பிட்ட புகாரை கிளிக் செய்து Submit செய்தால் நீங்கள் அளித்த புகாரின் விவரம் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு வந்துவிடும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி உங்கள் அடையாள எண்ணுடன் (ஆதார்) இணைப்பில் உள்ள தொலைபேசி எண்களை கண்டறிந்து கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments