தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்களின் கொடூர தாக்குதல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் கால்நடைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கட்டுமாவடி பகுதியில் தெரு நாய்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன் ஆறு மாத குழந்தையை வெறிநாய் கடித்து உரிய நேரத்தில் குழந்தையை காப்பாற்றப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் வெறிநாய் கடித்து ஒரு ஆடு பலியாகி இருந்தது. கட்டுமாவடி அருகே மேலகுடியிருப்பைச் சேர்ந்த வேலு என்பவரின் 13 ஆடுகளை மூன்று நாட்களாக காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நேற்று முன்தினம் புதன்கிழமை ஓச்சக்குடி கிராமம் அருகே 13 ஆடுகளும் வெறி நாய்களால் கடிக்கப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலை தொடருமானால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்படும். எனவே ஊராட்சி நிர்வாகமும்,மாவட்டநிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெறிநாய்களை அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.