புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணி புரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் மீமிசல்-கோபாலப்பட்டிணத்தை இணைக்கும் முக்கிய சாலையாக காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள காட்டுக்குளம் சாலை, மில் சாலை (SBI வங்கி) மற்றும் அவுலியா நகர் சாலை இருந்து வருகிறது.
இதில் முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையையாக காட்டுக்குளம் சாலை & மில் சாலை இருந்து வருகிறது. பேருந்து மூலமாக வெளியூரில் இருந்து மீமிசலில் வந்து ஊருக்குள் வருபவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்
இந்நிலையில் இரண்டு சாலைகளும் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்து வந்த நிலையில் கடந்த 06.07.2023 அன்று முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.70 லட்ச மதிப்பீட்டில் காட்டுகுளம் சாலை மற்றும் மில் சாலை என இரண்டு சாலைகளை புதிதாக தார் சாலை அமைப்பதற்காக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
மில் சாலை
கடந்த 02.01.2024 செவ்வாய்க்கிழமை கோபாலப்பட்டிணம்-மீமிசல் இணைக்கும் மில் சாலை (SBI வங்கி)-கடற்கரை சாலையில் பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சிறு பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்கும் பணிக்கான வேலை தொடங்கி கடந்த ஜூன் மாதம் சாலை பணிகள் நிறைவு பெற்றது
காட்டுக்குளம் சாலை
கடந்த 07.02.2024 புதன்கிழமை கோபாலப்பட்டிணம்-மீமிசல் இணைக்கும் காட்டுக்குளம் சாலையில் பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சிறு பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்கும் பணிக்கான வேலை ஆரம்பிக்கப்பட்டு 17 ஜூலை 2024 அன்று சாலை பணிகள் நிறைவு பெற்றது
பல வருடங்களுக்கு பிறகு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் கோபாலப்பட்டிணம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
இதே போன்று ஊரில் உள்ள முக்கிய இடங்களில் சாலைகள் இல்லாமல் உள்ளது அந்த இடங்களிலும் சாலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.