டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்




தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2024-ம் ஆண்டிற்கான குரூப்-2 மற்றும் 2 ஏ போட்டி தேர்வுக்கான அறிவிப்பில் 2,327 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வானது 14.09.2024 அன்று நடைபெற உள்ளது. மேற்படி தேர்விற்கு விண்ணப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 5-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கொள்ள தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments