மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடியில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வினை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வானது ஏழாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்விற்காக அனைத்து மாணவர்களும் புத்தகங்களை வாசித்தனர். இந்நிகழ்வின் மூலம் மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தினையும் புத்தக கண்காட்சியில் நல்ல புத்தகங்களை வாங்கி படிப்பதற்கு ஊக்கத்தையும் தருவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.
இந்நிகழ்வானது மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தப்படுகிறது.
இந் நிகழ்வில் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வானவில் மன்ற கருத்தாளர்கள் சண்முகபிரியா, ஜெனிட்டா மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டு புத்தகம் வாசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.