தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ். வருவாய்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய உள்துறை செயலாளரக தீரஜ் குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கால்நடை மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை செயலாளராக, சிட்கோ இயக்குநர் மதுமதி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தகவல் தொழிநுட்பத் துறைச் செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின்போது கலெக்டராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் துறை இயக்குநராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ்., ராணிப்பேட்டை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி கலெக்டர் அருணா ஐ.ஏ.எஸ்., புதுக்கோட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லட்சுமி பவ்யா ஐ.ஏ.எஸ். நீலகிரி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் கலெக்டராக பிரியங்கா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக ஆகாஷ் ஐ.ஏ.எஸ்.சும், அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி ஐ.ஏ.எஸ்.சும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் கலெக்டராக சிபி ஆதித்ய செந்தில் குமார் என்பவரும், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக அழகு மீனா ஐ.ஏ.எஸ்.சும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார். ராமநாதபுரம் கலெக்டராக சிம்ரன் ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுக்கான இட மாற்ற உத்தரவுகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.