தொண்டி பேரூராட்சியில் பிரபாகரன் பீச் கடற்கரையில் ரூ.2.60 கோடி மதிப்பில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் திட்ட மதிப்பீடு தயார் செய்து சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு அனுப்பியது. அதன் அடிப்படையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் தொண்டியில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கப்படும் என மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி, பொறியாளர் அகமது ஆகியோர் தொண்டியில் கடற்கரை பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கப்பட உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பேரூராட்சியின் திட்ட மதிப்பீடுகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், துணைத் தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.