மின்சார பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அரசு மானியம் போக, நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை கூறப்படுகிறது. அதன்படி, 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு முற்றிலும் மின் கட்டணம் இல்லை. 200 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு, எஞ்சிய 100 யூனிட் மின்சாரத்திற்கு 245 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும்போதும் கட்டணம் உயர்கிறது.
தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் உண்மையில் மின் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் 846 ரூபாயும், கேரளாவில் 415 ரூபாயும், தெலங்கானாவில் 215 ரூபாயும், குஜராத்தில் 571 ரூபாயும், மகாராஷ்டிராவில் 732 ரூபாயும், உத்தர பிரதேசத்தில் 300 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதே 200 யூனிட் மின்சாரத்திற்கு தமிழ்நாட்டில் 235 ரூபாயும், கர்நாடகாவில் 1,662 ரூபாயும், கேரளாவில் 880 ரூபாயும், தெலங்கானாவில் 545 ரூபாயும், குஜராத்தில் 1,157 ரூபாயும், மகாராஷ்டிராவில் 1,246 ரூபாயும், உத்தரபிரதேசத்தில் 450 ரூபாயும் மின் கட்டணம் விதிக்கப்படுகிறது.
500 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டிற்கு தமிழ்நாட்டில் 1,805 ரூபாயும், கர்நாடகாவில் 3,960 ரூபாயும், கேரளாவில் 3,065 ரூபாயும், தெலங்கானாவில் 2,890 ரூபாயும், குஜராத்தில் 3,065 ரூபாயும், மகாராஷ்டிராவில் 4,651 ரூபாயும், உத்தரபிரதேசத்தில் ரூ.2,900 வரையும் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதேபோல், 1000 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினாலும், தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவாக இருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.