நடுக்கடலில் மீன்பிடித்தபோது சிக்கிய கடல் பசுவை வலையை அறுத்து விடுவித்த மீனவர்கள்




ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள், பூமணி என்பவரின் நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் 4 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் விரித்த வலையில் சுமார் ஒரு டன் எடை கொண்ட கடல் பசு சிக்கியது. உடனே அவர்கள் தொண்டி கடற்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கடலோர போலீசாரின் அறிவுரையின்படி மீனவர்கள் பூமணி, முருகானந்தம், கரண் உள்ளிட்டோர் இணைந்து, வலையை அறுத்து அதில் சிக்கி இருந்த கடல்பசுவை விடுவித்தனர். அதனைத் தொடர்ந்து கடல் பசு கடலுக்குள் வேகமாக நீந்தி சென்றுவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். அவர்களின் செயலை கடலோர போலீசார் பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments