கல்வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ரெட்டையாளம் கிராமத்தில் சிதைந்த நிலையில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் அறந்தாங்கி அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ், பேராசிரியர் மணிவண்ணன், வரலாற்று ஆய்வாளர்கள் நவீன் குமார், சேதுபதி, தெய்வீகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
கோவில் நுழைவு வாயிலில் வலப்புற நிலைக்கல்லில் உள்ள கல்வெட்டை கண்டெடுத்து படியெடுத்தனர்.
கி.பி.11-ம் நூற்றாண்டு
இந்த கல்வெட்டு குறித்து அவர்கள் கூறுகையில், "இவ்வூர் இருபா நாடு என்று அழைக்கப்பட்டது. இவ்வூரை ஆண்ட மன்னன் திருமாலின் சக்கரம் போன்றவன் என்று கலிங்கத்துப்பரணி பாடிய புலவர் ஜெயங்கொண்டார் போற்றிய கருணாகர தொண்டமான் ஆவார் என கூறப்பட்டுள்ளது. இவரது காலம் கி.பி. 11-ம் நூற்றாண்டு.
கலிங்கப் போரிலும், ஈழப் போரிலும் குலோத்துங்க சோழனின் வெற்றியை நிலைக்க செய்து போரிட்டவன் என்று கல்வெட்டில் உள்ளது. இவ்வூரில் பெருமாள் (உய்ய வந்த நாயனார்) கோவிலையும் கட்டுவித்து நாற்பத்தென்கலம் நெல்லும், வயலும் கடமையாகவும், நிலக்கொடையாகவும் அளித்து அந்தாயழும்பன் என்பவனை மேற்பார்வை நிர்வாகம் பார்க்கவும் கல்லெழுதி வைத்துள்ளார். இக்கோவிலில் இவரது உருவச்சிலை ஒன்று உள்ளது'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.