பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் 500 டன் எடை கொண்ட தூக்குப்பாலத்தை பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பாம்பன் ரெயில் பாலம்
பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த பணியில் மண்டபம் நுழைவு பகுதியில் இருந்து பாம்பன் மையப்பகுதி வரையிலும் பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளன. பணிகள் நிறைவடைந்த பகுதியில் தனியாக என்ஜின் விடப்பட்டும், சரக்கு பெட்டிகளுடன் ரெயில்கள் இயக்கப்பட்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே பாம்பன் ரெயில் பாலத்தின் முக்கிய பணியான பாலத்தின் நடுவே தூக்குப்பாலத்தை நிலை நிறுவுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
3 மாதத்தில் முடிக்க திட்டம்
இதற்காக ரெயில்வே நுழைவுபாலத்தில் வடிவமைக்கப்பட்ட 77 மீட்டர் நீளமும், 500 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலத்தை தூண்கள் வழியாக நகர்த்தி கொண்டு வரும் பணி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்தன.
தற்போது தூக்குப்பாலமானது பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூண்களின் அருகே கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் தூக்குப்பாலம் மையப்பகுதியில் உள்ள 2 தூண்கள் மீதும் நிலை நிறுத்துவதற்கான பணி நடைபெறும் என கூறப்படுகிறது.
தூக்குப்பாலம் மையப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர் பாலம் திறந்து மூடுவதற்கான பணிகள் தொடங்கும் என ரெயில்வே அதிகாரி தெரிவித்தார். பாம்பன் புதிய ரெயில் பாலத்திற்கான மொத்த பணிகளை இன்னும் 3 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததை அகற்றிவிட்டு பாம்பன் ரெயில் நிலையத்தில் புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பாம்பன் ரெயில் நிலையம்
மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு மற்றும் ரெயில் பாலம் மிக முக்கியபங்கு வகிக்கிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் பாம்பன் பாலத்தை கடந்து பாம்பன் ரெயில்வே நிலையம் தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் வருகின்றன. மீண்டும் இதே வழியாக திரும்பி செல்கின்றன.
பாம்பன் கடலில் அமைந்த பழமையான ரெயில் பாலம் பழுதாகியதால் அதன் அருகிலேயே ரூ.545 கோடியில் புதிதாக பாலம் கட்டும் பணி 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.
தண்டவாளம் அமைக்கும் பணி
இதற்கிடையே பாம்பன் ரெயில்வே பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து சின்னப்பாலம் செல்லும் ரெயில்வே கேட் வரை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த ரெயில்வே தண்டவாளங்களை அகற்றி இடத்தை விரிவாக்கம் செய்து புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் ரெயில்வே பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து பாம்பன் தெற்கு வாடிசெல்லும் ரெயில்வே கேட் வரையிலும் 2 பகுதிகளிலும் ஏராளமான வீடுகள் உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த பகுதியில் சுமார் 4 அடி உயரத்தில் தண்டவாள பாதைக்குள் யாரும் வர முடியாத அளவிற்கு இரண்டு புறமும் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டுள்ளன. தற்போது பாம்பன் ரெயில் நிலைய பகுதியில் புதிய தண்டவாளங்கள் அமைக்க பழைய தண்டவாளங்கள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் செம்மண், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, பொக்லைன் எந்திரம் மற்றும் ரோடு ரோலர் மூலம் சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
புதிய கட்டிடம்
புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தாலும், 100 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித அடிப்படை வசதிகளின்றி ஓட்டு கொட்டகையில் செயல்படும் பாம்பன் ரெயில் நிலைய கட்டிடத்தை சீரமைக்கவில்லை. குறிப்பாக சென்னை மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் ரெயிலுக்கு முன்பதிவு செய்ய வரும் பயணிகள் ரெயில் நிலையத்தின் முன்பதிவு மையம் உயரமாக உள்ளதால் அவதியடைந்து வருகின்றனர். புதிய ரெயில் பாலம் பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்கும்பட்சத்தில் ஏராளமான ரெயில்கள் பாம்பன் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். எனவே, 100 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் இல்லாத பாம்பன் ரெயில் நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.