மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 573 மனுக்கள் பெறப்பட்டன. பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மகளை மீட்டு தரக்கோரி மனு
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் கோாிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். ஆலங்குடி தாலுகா கல்லாங்குடியை சேர்ந்த கலா தனது உறவினர்களுடன் வந்து அளித்த மனுவில், தனது மகளை கடந்த 16-ந் தேதி முதல் காணவில்லை. அதே பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்ற வாலிபர் ஏமாற்றி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. உயிரோடு இருக்கிறாளா?, அவளது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் அருணா, போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
573 மனுக்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனை மாற்றி முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக புகார் மனுவை அளித்தனர்.
கூட்டத்தில் மொத்தம் 573 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்பட பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.