விசைப்படகுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் விசைப்படகுகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். வாரத்தில் சனிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்று மறுநாள் காலையில் கரைக்கு திரும்பி வருவார்கள். இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-
ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறோம். கடலில் நல்ல மீன்கள் வலையில் பிடிபட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மீன்கள் போதுமான அளவில் பிடிபடுவதில்லை. நல்ல விலையுர்ந்த மீன்களும் சிக்குவதில்லை.
நஷ்டம்
சமீபத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது சம்பவம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்ததில் மீன்கள் அதிகம் பிடிபடவில்லை. இதனால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் தான். மீன்பிடிக்க செல்வதில் ஒரு விசைபடகிற்கு டீசல் செலவு உள்ளிட்ட செலவுகள் ரூ.50 ஆயிரம் வரை ஆகிறது. அதற்கேற்ப மீன்கள் பிடிபட்டு கரைக்கு கொண்டு வந்து விற்பனையாவதில் லாபம் கிடைக்கும். ஆனால் செலவுக்கு கூட கட்டுப்படியாகாமல் நஷ்டமானது. இதனால் கூட்டம் நடத்தி முடிவு எடுத்தோம். அதனால் இன்று (அதாவது நேற்று) கடலுக்கு செல்லவில்லை. கடலுக்கு செல்வதில் அடுத்து கூட்டம் நடத்தி முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.