சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடலில், பச்சை வரி இறால் குஞ்சுகள் விடப்பட்டன




சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடலில் பச்சை வரி இறால் குஞ்சுகள் விடப்பட்டன.

கடல் வளம்

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, இப்பகுதியில் நீடித்து இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடுதல் என்ற திட்டத்தை மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 200 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை, தமிழ்நாட்டின் கடல் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி பகுதிகளில் விடப்படும்.

பச்ைச வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

இந்த நிலையில், மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், மீன்வள ஆய்வாளர் ஆனந்த், திட்டத்தின் தலைவர் முதன்மை விஞ்ஞானி தமிழ்மணி, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், விசைப்படகு, நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் இணைந்து தஞ்சை மாவட்டம் மனோராவில் உள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 1.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை விட்டனர். இந்த நிகழ்ச்சியை, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜான்சன் ஒருங்கிணைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments