புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைாதனத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஆயுதப்படை மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆயுதப்படை மைதானத்தில் அதிகாரிகள், பார்வையாளர்கள் அமர்வதற்காக விழா பந்தல் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தேசிய கொடி கம்பத்தில் சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
தேசிய கொடி வர்ணம்
இதற்கிடையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுச்சுவரில் தேசிய கொடியின் வர்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 200 அடி நீளத்தில் மூவர்ண கொடியின் நிறத்தின் வர்ணம் பூசும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. சுற்றுச்சுவரில் விளம்பர சுவரொட்டிகள் உள்ளிட்டவை ஒட்டப்படுவதை தடுப்பதற்காகவும் தன்னார்வலர்கள் மூலம் போலீஸ் துறையினர் இப்பணியை மேற்கொண்டுள்ளனர். சுதந்திர தினவிழாவையொட்டி அணிவகுப்பு மரியாதைக்கான பயிற்சியில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்காக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.