மணமேல்குடி ஒன்றியத்தல் உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி - பயிற்சியாளர்கள் உடன் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம்
இக்கூட்டத்தினை மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் மதிப்புக்குரிய
திரு, செழியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் அனைத்து நடுநிலைப்பள்ளி உயர் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு எமிஸ் இணையத் தளத்தில் மாணவர்கள் சேர்க்கை, ஆதார் எண் பதிவேற்றம். மாணவர்களின் தற்போது உள்ள புகைப்படங்கள் மாற்றி அமைத்தல், அரசு நல உதவி திட்டங்களை எமிசில் அப்டேட் செய்வது குறித்தும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களை பதிவேற்றம் செய்தல், அலுவலகத்தில் இருந்து எமிஸ் தொடர்பான பணிகள் குறித்து தகவல் கூறும்போது உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு தினமும் மாணவர்களின் வருகை பதிவு செய்ய வேண்டும் என்றும், கற்றல் கற்பித்தல் உபகரணங்களை பயன்படுத்துதல் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு சசிகுமார், திரு பன்னீர்செல்வம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் ஹைடெக் லேப் நிர்வாகிகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.