கோவையில் இருந்து தேவகோட்டை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 43) என்பவர் ஓட்டினார். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை சேர்ந்த சவேரியார் மகன் சைமன் ராஜ் (30) என்பவர் கிளீனராக இருந்தார். பஸ் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் புறவழிச்சாலையில் வந்த போது, முன்னே சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் பஸ் மோதியது. இதில் சைமன் ராஜ் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.