ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை மேம்பாலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை
மகாபலிபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களை இணைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வழியே செல்கிறது. ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பணியின் ஒரு பகுதியாக பட்டணம்காத்தான் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியே தூத்துக்குடி, திருச்செந்தூர் மார்க்கத்தில் இருந்து வந்து செல்லும் வாகனங்கள் செல்கிறது. இதுதவிர ராமேசுவரம், தேவிபட்டினம், தனுஷ்கோடி, திருப்புல்லாணி போன்ற பகுதிகளுக்கும் இப்பாலம் வழியே செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து நிறைந்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்த ரெயில்வே மேம்பாலத்தில் எந்த பராமரிப்பு பணியும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. பாலத்தின் இருபுறமும் விளக்குகள் அமைக்கப்பட்டு பாலம் பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களில் அவை எரியவில்லை. இதனால் இரவு முழுவதும் பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது.
சீரமைக்க கோரிக்கை
இந்த பாலத்தை கடந்துதான் குடிசை மாற்று வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு சென்றுவர வேண்டும். இரவில் விளக்குகள் எரியாததால் இந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பஸ் போக்குவரத்து இதுவரை இயக்கப்படவில்லை. பாலத்தின் இருபுறமும் நடந்து செல்லும் பாதையில் செடிகள் வளர்ந்துள்ளது.
மேலும் பாலம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கிழக்கு கடற்கரை சாலை மேம்பால பகுதியில் விளக்குகள் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.