அழகன்குளம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் கடல்நீர், வைகைநீர் சேரும் ஆற்றங்கரை முகத்துவார பகுதி உள்ளது. இந்த கடல் பகுதி வழியாக தினமும் இக்கிராமத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நாட்டுப்படகு, பைபர் படகு, சிறிய வத்தைகளில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த கடல் பகுதி அடிக்கடி மணலால் மூடப்படுவதால் மீன்பிடிக்க செல்லும் படகுகள் மணலில் சிக்கித்தவிக்கும் நிலை உள்ளது.
மேலும் முகத்துவார பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் மீன்துறை மூலம் பல கோடி நிதியில் கடல் பகுதி பெயரளவிற்கு தூர்வாரப்பட்டு ஒரு பகுதியில் மட்டும் பாராங்கற்களால் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. அரசு நிதியில் முகத்துவார பகுதியை முழுமையாக தூர்வாராததாலும், தடுப்புச்சுவரை இருபுறமும் கட்டாததாலும் கடல் பகுதி தொடர்ந்து மணலால் மூடப்பட்டு வரும் நிலை உள்ளது. இதனால் இவ்வழியே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வசதியாக ஆழமாக தூர்வாரி மணலை அப்புறப்படுத்தவும், முகத்துவார கடல் பகுதியை மண் மூடுவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.