தொண்டியில் கடல் உள்வாங்கியதால் தரை தட்டி நின்ற படகுகள்




தொண்டியில் பிரபாகரன் பீச் என அழைக்கப்படும் நீண்ட கடற்கரை உள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென தொண்டி புதுக்குடி முதல் மகாசக்திபுரம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் படகுகள் அனைத்தும் வழக்கமாக நிறுத்தப்படும் இடங்களை விட்டு கடலுக்குள் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. 50 மீட்டர் தூரம் முதல் 100 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பொதுமக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். தற்போது கடலில் காற்று வேகமாக வீசுவதால் கடல் நீர் உள் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் இதனால் கடல் உள்வாங்கி காணப்படுகிறது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். கடல் உள்வாங்கியதால் பெரும்பாலான படகுகள் தரை தட்டி நின்றன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments