தொண்டி அருகே நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 3 மீனவர்கள் மீட்பு






தொண்டி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. அதிலிருந்த 3 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கடலில் கவிழ்ந்த படகு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் மாணிக்கம் (வயது 35), திருவேலன் (35) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் நாட்டுப்படகில் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் சென்ற படகு சுமார் 10 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதால் திடீரென கடலில் கவிழ்ந்ததாக தெரிகிறது.

உடனே மீனவர்கள் 3 பேரும் படகை பிடித்துக்கொண்டு கடலுக்குள் தத்தளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பாததால் நம்புதாளை மீனவர்கள் இதுதொடர்பாக தொண்டி கடற்கரை போலீஸ் நிலையம், மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மீட்பு

தொடர்ந்து கடலோர காவல் படையினர் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நம்புதாளை மீனவ கிராமத்தினரும் படகுகளில் கடலுக்கு சென்று மீனவர்களை தேடினர்.

இந்நிலையில் நேற்று காலை கடலில் கவிழ்ந்த படகு, மீனவர்களை கண்டுபிடித்தனர். தொடர்ந்து கடலுக்குள் மாயமான 3 மீனவர்கள் மற்றும் படகை பத்திரமாக மீட்டு நம்புதாளை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் நம்புதாளை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments