மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் சிதறிய வெடிபொருட்களால் பரபரப்பு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்




எஸ்.பி.பட்டினம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் சிதறிய வெடிபொருட்களால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சாலையில் சிதறிய வெடிபொருள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி பகுதியில் நேற்று ஒருவர் மோட்டார்சைக்கிளில் சாக்கு மூடையுடன் சென்று கொண்டிருந்தார். அங்கு இருந்த வேகத்தடையில் வேகமாக மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சாக்குமூடை தவறி சாலையில் விழுந்தது. இதில் மூடையில் இருந்த பொருட்கள் சாலையில் சிதறின. அவை வெடி பொருட்கள் போல இருந்ததால் வெடித்து விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அந்த வழியாக வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதை பார்த்த மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபரும் அங்கிருந்து தப்பிஓடினார். அப்போது அவரது செல்போன் தவறி சாலையில் விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் ஓரியூர் கிராம நிர்வாக அலுவலர் யாகப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் எஸ்.பி.பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

ஜெலட்டின் குச்சிகள்

விசாரணையில் சாலையில் சிதறி கிடந்தது ஜெலட்டின் குச்சிகள் என்பது தெரியவந்தது. 400 ஜெலட்டின் குச்சிகள், 400 டெட்டனேட்டர், 3½ கிலோ பீஸ் ஒயர் ஆகியவை இருந்தன. மேலும் மர்மநபர் தவறவிட்டுச் சென்ற செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி, மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments