ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத திருவிழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 42 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 10 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பிரிவில் 25 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. சின்னமாடு பிரிவில் மாட்டு வண்டிகள் அதிகமானதால் 2 பிரிவுகளாக பிரித்து பந்தயம் நடத்தப்பட்டது.

பரிசு

பந்தயத்தில் எல்கையை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

பந்தயம் நடைபெற்ற சாலையின் இருபுறங்களில் திரளான ரசிகர்கள் திரண்டிருந்து கண்டு களித்தனர். மாட்டு வண்டி பந்தயத்தை பாண்டிபத்திரம் பாரி வள்ளல் இளைஞர் மன்றத்தினர், கிராமமக்கள் இணைந்து நடத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments