தமிழ்நாட்டில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ஏழை மாணவர்களின் 'மருத்துவர்' கனவை நனைவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு 584 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 622 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 5 மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளது, அப்பகுதி மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயலோகம் அரசு பள்ளியில் மொத்தம் 798 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயராஜ் பணியாற்றி வருகின்றனர். இங்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரம் போக காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கும் பெரிதும் உதவி வருகின்றன. இதனை பயன்படுத்தி இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இலவசமாக கல்வி பயின்று வருகின்றனர்.
5 மருத்துவ மாணவர்கள்: இந்நிலையில் கடந்த 2021 - 2022-ஆம் ஆண்டுகளில் படித்த சுதாகர் மற்றும் சுபாஸ்ரீ, 2022 - 2023-ஆம் படித்த ஆர்த்தி, ஜெயந்தி, கடல் வேந்தன் என ஐந்து மாணவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மூன்று மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியிலும் இரண்டு மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரியிலும் மருத்துவம் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வருடம் நீட் தேர்வில் 33 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், 28 பேர் எம்பிபிஎஸ் படிப்பிற்கும், ஐந்து பேர் பிடிஎஸ் படிப்பிற்கும் தேர்வாகியுள்ளனர். இதில் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இந்த மாணவர்களை பாராட்டும் விதமாக அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ஸ்டெதாஸ்கோப் அணிவித்து, விருது உள்ளிட்ட பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
கஷ்டப்பட்டுப் படிக்காதே இஷ்டப்பட்டு படி: இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மருத்துவ மாணவர்கள், "இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள், எங்களைப் போன்று கடினமாக உழைத்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும். உங்களது உழைப்பிற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் கொடுத்த அறிவுரையாலும் பயிற்சியும் தான்,எங்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. கஷ்டப்பட்டு படிப்பதை விட இஷ்டப்பட்டு படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம்.மருத்துவ துறைக்குத் தேர்வானதன் மூலம் எங்களைப் போன்று முயற்சி செய்பவர்களுக்கு நிச்சயம் நாங்கள் உதவுவோம்"என்றனர்.
இதனைத் தொடர்ந்து நம்மிடையே பேசிய தலைமை ஆசிரியர் ஜெயராஜ், "7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் இதுவரை நமது பள்ளியில் 8 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் அதிக அளவு முயற்சித்து இது போன்ற மருத்துவம் மற்றும் பல்வேறு உயர் படிப்பிற்கு மாணவர்களை தயார் செய்வோம்" என பெருமிதத்துடன் கூறினார்.
அன்னவாசல் அருகே வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுபாஸ்ரீ, ஆர்த்தி, ஜெயந்தி, சுதாகர், கடல்வேந்தன் ஆகிய 5 மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து 5 மாணவ-மாணவிகள் படித்த பள்ளிக்கே நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காவுதீன் உள்பட பலர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.