இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய யாழ்ப்பாணம் நகருக்கு கூடுதம் விமானம் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலத்திற்கு பிறகு நிறைவேறியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் பகல் நேரங்களில் மட்டும் செயல்படக்கூடிய விமான நிலையத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியது. அதோடு சென்னை- யாழ்ப்பாணம் - சென்னை இடையே, ஏர் இந்தியா நிறுவனத்தின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம், விமானச் சேவையை தொடங்கி நடத்தியது.
கரோனா பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக அந்த விமான சேவையும் நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பின்னர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதியில் இருந்து மீண்டும் சென்னை - யாழ்ப்பாணம் - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் விமான சேவையை தொடங்கியது.
இந்த விமானம் காலை 10.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்றுவிட்டு மீண்டும் பகல் 2.40 மணிக்கு சென்னைக்கு திரும்பி வருகிறது. இந்த விமான சேவைகள் காலை நேரம் மட்டுமே இயக்கப்படுவதால் பிற்பகலிலும், சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். அதிலும் குறிப்பாக சுற்றுலா பயணிகள், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்கள், அதிகமாக வலியுறுத்தினர்.
இந்த நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து சென்னை - யாழ்ப்பாணம் - சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்கி நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செப்டம்பர் 1 தேதியில் இருந்து தினமும் பகல் 1.55 மணிக்கு, புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் யாழ்ப்பாணத்திற்கு, மாலை 3.10 மணிக்கு செல்கிறது. மறுமார்க்கத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்கிறது.
விமான கட்டணம் எவ்வளவு?: சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு பயண கட்டணமாக ரூ.7,604 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் செப்.1 முதல் சென்னை- யாழ்ப்பாணம் - சென்னை இடையே தினமும் 2 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த விமான சேவைகளை காலையில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனமும், மாலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் இயக்குகின்றன.
இதனால் சென்னையில் இருந்து மாலையில் யாழ்ப்பாணம் செல்வதற்கு விமான சேவை இல்லை என்ற குறைபாடு நீங்குகிறது. இந்த இரு விமான சேவைகள் பயனாக அவசர வேலையாக யாழ்ப்பாணம் சென்று விட்டு உடனடியாக சென்னை திரும்புபவர்கள் காலை அலையன்ஸ் ஏர் விமானத்தில் சென்று விட்டு மாலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு திரும்பி வர முடியும். அதோடு யாழ்ப்பாணம் சுற்றுலா தளமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த விமான சேவைகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.