கோபாலப்பட்டிணத்தில் இன்று (செப்.22) குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆய்வு - ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்பு!




கோபாலப்பட்டிணத்தில் 22-09-2024 அஸர் தொழுகைக்கு பிறகு குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆய்வு  செய்யவுள்ளதாக ஜமாஅத் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஜமாஅத் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 20-09-2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு மகா சபையில் GPM சொந்தங்கள் குழுமம் சார்பாக நமது ஊரில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நிரந்தர தீர்வு (இடம்) காண வேண்டும் என்று கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகத்திற்கு கோரிக்கை கடிதம் கொடுத்தனர். 

மகாசபையில் ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக பசீர் மற்றும் பொதுமக்கள் மற்றும் மேல்மட்ட குழு உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதம் நடந்தது. 

அதனடிப்படையில் கீழ்க்கண்ட உறவுகளை குழுவாக அறிவித்து, இன்று ஞாயிற்றுக்கிழமை 22-09-2024 அஸர் தொழுகைக்கு பிறகு குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது என்றும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய ஏற்பாடுகள் செய்வது என்றும் நிர்வாகிகளின் தரப்பில் உறுதி கூறப்பட்டது.

குழு உறுப்பினர்கள்

1) ஜமாஅத் நிர்வாகிகள் - 7 நபர்கள்
2) உயர்மட்ட குழு உறுப்பினர்கள் - 9 நபர்கள்
3) GPM சொந்தங்கள் குழுமம் - 10 நபர்கள்
4) GPM மக்கள் மேடை குழுமம் - 10 நபர்கள்
5) வ.இ. சாகுல் ஹமீது
6) முகம்மது ஆசிக்
7) ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக பசீர்
8) ஹலீம்
9) நலீம்
10)மீனவர் சங்க தலைவர் - பசீர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments