கோபாலப்பட்டிணத்தில் 22-09-2024 அஸர் தொழுகைக்கு பிறகு குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக ஜமாஅத் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஜமாஅத் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 20-09-2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு மகா சபையில் GPM சொந்தங்கள் குழுமம் சார்பாக நமது ஊரில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நிரந்தர தீர்வு (இடம்) காண வேண்டும் என்று கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகத்திற்கு கோரிக்கை கடிதம் கொடுத்தனர்.
மகாசபையில் ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக பசீர் மற்றும் பொதுமக்கள் மற்றும் மேல்மட்ட குழு உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதம் நடந்தது.
அதனடிப்படையில் கீழ்க்கண்ட உறவுகளை குழுவாக அறிவித்து, இன்று ஞாயிற்றுக்கிழமை 22-09-2024 அஸர் தொழுகைக்கு பிறகு குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது என்றும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய ஏற்பாடுகள் செய்வது என்றும் நிர்வாகிகளின் தரப்பில் உறுதி கூறப்பட்டது.
குழு உறுப்பினர்கள்
1) ஜமாஅத் நிர்வாகிகள் - 7 நபர்கள்
2) உயர்மட்ட குழு உறுப்பினர்கள் - 9 நபர்கள்
3) GPM சொந்தங்கள் குழுமம் - 10 நபர்கள்
4) GPM மக்கள் மேடை குழுமம் - 10 நபர்கள்
5) வ.இ. சாகுல் ஹமீது
6) முகம்மது ஆசிக்
7) ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக பசீர்
8) ஹலீம்
9) நலீம்
10)மீனவர் சங்க தலைவர் - பசீர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.