கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம் பலத்த மழை




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம் பலத்த மழை பெய்தது

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 15 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மயிலாடுதுறை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என‌ தெருவித்து இருந்தது 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 31.08.2024 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து அவெப்பம் தணிந்து  மழை நீண்ட நாட்களுக்கு பிறகு  பலத்த மழை பெய்து குளிர்ச்சியான சூழல்நிலவியது.

பலத்த மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில்   தண்ணீர் தேங்கியுள்ளது

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது..காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments