புதிய முனையம்
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கடந்த ஜூன் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய முனையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் திருச்சி விமான நிலையத்தினை பயன்படுத்தும் வெளிநாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு சேவை
இதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளையும் இண்டிகோ நிறுவனம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமான சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் உள்நாட்டு விமான சேவைகளை 45 ஆயிரத்து 529 பேர் பயன்படுத்தி உள்ளனர். இது கடந்த ஜூன் மாதத்தை விட 26.6 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோன்று வெளிநாட்டு விமான சேவைகளை 1 லட்சத்து 16 ஆயிரத்து 636 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இது கடந்த ஜூன் மாதத்தை விட 13.8 சதவீதம் அதிகம் ஆகும்.
17.1 சதவீதம் அதிகரிப்பு
உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவைகளை மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 165 பேர் பயன்படுத்தி உள்ளனர். இது கடந்த ஜூன் மாதத்தை விட 17.1 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.