சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் திரியும் மாடுகள்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் கொள்ளுக்காடு தொடங்கி கட்டுமாவடி வரை. இரவு நேரங்களில் சுமார் 500- க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித்திரிகிறது. கடற்கரை ஓரங்களில் உள்ள பொதுமக்கள் யாரும் மாடுகளை கட்டுவது இல்ைல. பகல் நேரங்களில் கடற்கரை ஓரங்களில் மேய்ந்து திரியும் மாடுகள் மாலை 6 மணிக்கு மேல் சாலைகளில் தஞ்சமடைகிறது.
இரவு 10 மணி அளவில் சாலையின் நடுவில் படுத்து விடுகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் விரைவு பஸ், சுற்றுலா பஸ் இந்த வழியாக செல்லக்கூடிய கார்கள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
விபத்துகள்
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் கட்டினால்தான் விபத்துகளை தடுக்கமுடியும். அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய அறிவிப்பு வெளியிட்டு சாலைகளில் மாடுகள் திரிவதை கட்டுப்படுத்தினால் தான் விபத்துகளை தடுக்க முடியும். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.