கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை




சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் திரியும் மாடுகள்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் கொள்ளுக்காடு தொடங்கி கட்டுமாவடி வரை. இரவு நேரங்களில் சுமார் 500- க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித்திரிகிறது. கடற்கரை ஓரங்களில் உள்ள பொதுமக்கள் யாரும் மாடுகளை கட்டுவது இல்ைல. பகல் நேரங்களில் கடற்கரை ஓரங்களில் மேய்ந்து திரியும் மாடுகள் மாலை 6 மணிக்கு மேல் சாலைகளில் தஞ்சமடைகிறது.

இரவு 10 மணி அளவில் சாலையின் நடுவில் படுத்து விடுகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் விரைவு பஸ், சுற்றுலா பஸ் இந்த வழியாக செல்லக்கூடிய கார்கள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.

விபத்துகள்

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் கட்டினால்தான் விபத்துகளை தடுக்கமுடியும். அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய அறிவிப்பு வெளியிட்டு சாலைகளில் மாடுகள் திரிவதை கட்டுப்படுத்தினால் தான் விபத்துகளை தடுக்க முடியும். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments