ஓணம் பரிசு அறிவித்த ஏர் இந்தியா: கேரளா சவுதி அரேபியா விமான சேவை தொடக்கம்!




கேரளா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரை இணைக்கும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிதாக விமான சேவையை தொடங்கி உள்ளது. இதனால் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டை சேர்ந்த அரபு நாட்டு தொழிலாளர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சவுதி அரேபியா போன்ற பாலைவன நாடுகளில் இந்தியாவை சேர்ந்தவா்கள் பலரும் வேலைக்காக சென்று வருகின்றனா். உலக அளவில் இந்தியர்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக இந்தியாவின் தென்மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு கர்நாடகத்தை சோ்ந்தவர்கள் தான் அங்கு அதிகம் வேலை பார்த்து வருகின்றனர்.

ரியாத்திற்கும் நேரடி விமான சேவை

அவர்கள் வசதிக்காக திருவனந்தபுரம், கொச்சியில் உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடி மற்றும் இணைப்பு விமான சேவை உள்ளன. தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதிதாக செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் இருந்து ரியாத்திற்கு விமான சேவையை அதிரடியாக தொடங்கி உள்ளது.
 
கேரளாவுக்கும், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கும் நேரடி விமான சேவை நிச்சயம் வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனா். அவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை தற்போது ஏர் இந்தியா விமானம் நிறைவேற்றி உள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சார்பில் திருவனந்தபுரத்திற்கும், ரியாத்திற்கும் இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஓணம் பண்டிகை பரிசு

ஓணம் பண்டிகை பரிசாக இந்தியாவின் தென்மாநிலத்தையும், சவுதி அரேபியாவையும் இணைக்கும் வகையில் ஏர் இந்தியா எஸ்க்பிரஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்கி உள்ளது. இதனால் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகத்தை சோ்ந்த மக்களும் பயன்பெறுவார்கள். அனைத்து திங்கள்கிழமைகளிலும் இரவு 7.55 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX521 என்ற விமானம் புறப்படும்.

அந்த விமானம் அன்றைய இரவு 10.40 மணிக்கு ரியாத் விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக அதே நாள் இரவு 11.20 மணிக்கு ரியாத்தில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் மறுநாள் காலை (செவ்வாய்கிழமை) காலை 7.30 மணிக்கு கேரளாவை வந்தடையும். இதனால் அரபு நாடுகளில் வேலை செய்யும் தமிழ்நாடு மற்றும் கேரள வாசிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments