புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் உள்ள ரபீக் என்பவருக்கு சொந்தமான மட்டை மில்லில் தீவிபத்து.அந்த மில்லில் இருந்தால் இயந்திரங்கள் ட்ராக்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசம் .
இரண்டு தீ அனைப்பு வாகனம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ராஜேந்திரபுரம் பகுதியில் ரபீக் என்பவருக்கு சொந்தமான மட்டை மில் உள்ளது இந்த மட்டை மில்லில் இன்று பணியாளர்கள் வேலைப் பார்த்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக டிராக்டரில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது
உடனே சுதாரித்து கொண்ட தென்னை மட்டை மில்லில் பணியில் இருந்த பணியாளர்கள் அங்கு இருந்து வெளியேறி உடனே தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவம் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்க முற்பட்டனர் ஆனால் அருகில் இருந்த தேங்காய் மட்டையில் தீ பரவியதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்
கூடுதலாக கீரமங்கலம் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தற்போது தீயை அணைத்து வருகின்றனர்
இந்த பகுதி முழுவதும் கரும் புகைகள் சூழ்ந்து காணப்படுவதால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.