புதிதாக திறக்கப்பட்ட மரகத பூஞ்சோலையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு?




புதிதாக திறக்கப்படட மரகத பூஞ்சோலையில் பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மரகத பூஞ்சோலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் மரகத பூஞ்சோலை எனும் பூங்கா 3 இடங்களில் திறக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டை செல்லும் வழியில் குப்பையன்பட்டி கிராமத்தில் பூஞ்சோலையும் ஒன்றாகும். இந்த பூஞ்சோலையில் மரங்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பசுமைமயமாக்கல் உள்ளிட்டவை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராசி வகையான மரக்கன்றுகள் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்துள்ளன. மேலும் செயற்கை நீரூற்றும் இடம்பெற்றுள்ளது. இதனை பொதுமக்கள் பார்க்க வந்து செல்கின்றனர்.

பொழுதுபோக்கு அம்சம்

இந்த நிலையில் இப்பூஞ்சோலையில் பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "பூஞ்சோலையில் மரங்களின் வகைகளை அறிந்து கொள்ள முடிகிறது. அதேநேரத்தில் சிறுவர்கள், குழந்தைகளுடன் வரும் போது இங்கு சற்று அமர்ந்து சுற்றிபார்த்து செல்லும் வகையில் பொழுது போக்கு அம்சமும் இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments