ஆவுடையார்கோவில் அருகே ஒக்கூர் சாலையில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்புறம் புதிதாக டாஸ்மாக் கடை கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. கடை திறக்கும் முன்பு 15 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த டாஸ்மாக் பார் உரிமையாளரின் உறவினர்கள் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை தேவையில்லை. எனவே புதிய கட்டிடத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும். அதனால் அவர்களிடம் புகார் மனு கொடுங்கள் என்று கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.