திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்படுமா? அமைச்சர் பதிலால் மக்கள் மகிழ்ச்சி!




இந்தியாவின் முன் மாதிரி பேருந்து போக்குவரத்து கழகமாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் தற்போது செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க 1996-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சிறிய மாவட்டங்களாக இருந்தால் 2 மாவட்டங்களை சேர்த்து தனித்தனியாக போக்குவரத்து கழகங்கள் அப்போது செயல்பட்டு வந்தன.

பல்லவன் போக்குவரத்து கழகம்
அதாவது சென்னை மாநகராட்சிக்கு பல்லவன் போக்குவரத்து கழகம், கோயம்புத்தூருக்கு சேரன், சேலத்திற்கு அண்ணா, திருச்சிக்கு தீரன் சின்னமலை, புதுக்கோட்டைக்கு வீரன் அழகு முத்துக்கோன், விழுப்புரத்திற்கு தந்தை பெரியார், கும்பகோணத்திற்கு சோழன், மதுரைக்கு பாண்டியன், திருநெல்வேலிக்கு கட்டபொம்மன் என்று கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 17 போக்குவரத்து கழகங்கள் இருந்து வந்தன.
விஜய்க்கு போட்டியே இல்லை.!

கலைஞர் கருணாநிதி
இது மட்டுமல்லாமல் நீண்ட தூர பஸ்களுக்கு திருவள்ளுவர் மற்றும் ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகங்கள் தனியாக இருந்தன. போக்குவரத்து கழகங்களுக்கு பெயர் வைப்பதில் எழுந்த பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்து கழகங்களை ஒன்றினைத்து ஒழுங்குபடுத்தும் வகையில் 1996-ம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி போக்குவரத்து கழகங்களின் பெயர்களை மாற்றி அதன் கட்டமைப்பையும் சீரமைத்தார். இதனை நீண்ட தூர பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் என்றும், பல்லவன் போக்குவரத்து கழகமானது மாநகர போக்குவரத்து கழகம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மற்றவை அணைத்தும் அரசு போக்குவரத்து கழகங்களாக செயல்பட்டன.

கும்பகோணம்
இவ்வாறு இருக்க பல்வேறு போக்குவரத்து கழகங்கள் இணைக்கப்பட்டன. அப்போது அரசு போக்குவரத்து கழகம் திருச்சி என்று வரும் என எதிர்பார்த்த நிலையில் அப்போதைய கும்பகோணம் அமைச்சர் கோசி.மணியின் கோரிக்கையால் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் என்று கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அதிரடியாக அறிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments