திண்டுக்கல் வழி மயிலாடுதுறை பாலக்காடுக்கு புதிய ரயில்




மயிலாடுதுறையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் ரயில், காலை 8:50 மணிக்கு தஞ்சாவூருடன் நிறுத்தப்படுகிறது. இதே போல, பாலக்காடு ரயில், மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு இரவு 7:10 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.


இவ்விரு ரயில்களையும் ஒருங்கிணைத்து தஞ்சாவூரில் காலை 8:55 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியே பாலக்காடுக்கு மதியம் 2:40 மணிக்கு சென்றடையும் வகையில் புதிய ரயில் இயக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.


மறுமார்க்கமாக, ஈரோட்டில் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு பாலக்காடுக்கு காலை 11:35 மணிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து காலை 11:40 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி,தஞ்சாவூர் வழியே மயிலாடுதுறைக்கு இரவு 8:30 மணிக்கு சென்றடையும்.

இரு பக்கமும் இன்ஜின் தொகுப்பு பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படுவதால், திண்டுக்கல்லில் இன்ஜின் திசை மாற்றுவதற்கான தாமதம் ஏற்படாது.


இதேபோல கேரள மாநிலம் புனலுாரில் மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர் வழியே மதுரைக்கு அதிகாலை 3:00 மணிக்கு வருகிறது.


இந்த ரயிலை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம் வழியே விழுப்புரத்திற்கு காலை 8:00 மணிக்கு சென்றடையும் வகையில் நீட்டிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments