நிதி உதவி திட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின் கவுரவ நிதித் திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் 01.02.2019-க்கு முன்பு நேரடி பட்டா உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக ஏப்ரல் முதல் ஜூலை வரை, ஆகஸ்டு முதல் நவம்பர் வரை, டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து மாற்றிகொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3,889 பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர்.
சிறப்பு உதவி மையம்
இதேபோல விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பி.எம். கிஷான் இணையதளம் மற்றும் செயலி மூலம் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடைசி தவணையானது விவரங்கள் பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,378 பயனாளிகள் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.
இத்திட்டம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய கிராமங்கள் தோறும் கிராம பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை தெரிந்துகொள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். தகுதி உள்ள விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை அணுகி தவணைத் தொகை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இதற்கென சிறப்பு உதவி மையம் பிரதி வெள்ளி தோறும் செயல்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.