ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை..




ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழபனையூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசிஙகம். இவர் 2009-ம் ஆண்டு புதிதாக மின் இணைப்பு வழங்கக்கோரி கடலாடி மின்வாரிய அலுவலகத்தில் மனுசெய்தார். இந்த மின் இணைப்பு வழங்குவதற்கு கடலாடி மின்வாரிய இளநிலை மின் பொறியாளர் முருகன் என்பவர் ரூ.1000 லஞ்சம் கேட்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைசிங்கம் இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்

அவர்களது ஆலோசனையின்படி துரைசிங்கம், ரசாயனம் தடவப்பட்ட ரூ.1000 லஞ்ச பணத்தை கொடுக்க முயன்ற போது போலீசார் முருகனை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் கோர்டடில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் ராம், லஞ்சம் வாங்கிய இளநிலை மின் பொறியாளர் முருகனுக்கு 2 ஆண்டுசிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments