வழக்கில் சிக்கிய காரை விடுவிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 6 ஆண்டு சிறை சிவகங்கை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு தீர்ப்பு..




வழக்கில் சிக்கிய காரைவிடுவிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர்

சிவகஙகை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த அழகாபுரி பகுதியை சேர்ந்தவர், அன்பு மலை கண்ணன் என்ற சாதுமங்கலம் சாமி. இவரது கார் ஒன்று 2010-ம் ஆண்டு காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கு தொடர்பாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, காளையார் கோவில் போலீஸ் நிலையத்தில் அப்போதைய இன்ஸ் பெக்டராக இருந்த செங்குட்டுவனை சந்தித்து தன்னுடைய காரை விடுவிக்கும்படி அன்பு மலைகண்ணன் கேட்டுள்ளார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே காரை விடுவிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

6 ஆண்டு சிறை

லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பு மலைகண்ணன், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை 2010-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி, இன்ஸ்பெக்–டர் செங்குட்டுவனை சந்தித்து அன்பு மலைகண்ணன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனை கையும், களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பாக சிவகங்–கை–யில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜரானார். வழக்கை நீதீபதி செந்தில்முரளி விசாரணை செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments