தூய்மையே சேவை என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி முதல் மீமிசல் வரை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூய்மை பணியை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி அரசு கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் திட்ட அலுவலர் ரமேஷ் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான வடக்கு புதுக்குடி கிராமத்தில் இருந்து தெற்கு புதுக்குடி கிராமம் வரை கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.