சமூக வலைத்தளங்களில் பண்டிகை கால சலுகைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி
இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோசடி நபர்கள் இதனை குறித்து சமூக வலைத்தளங்களில் தங்களது கைவண்ணத்தை அரங்கேற்றி, அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை திருடி, பணம் மோசடி செய்யும் சம்பவம் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு பொருட்களை பண்டிகை கால சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறி சமூகவலைத்தளத்தில் அதனை பரப்பிவிடுகின்றனர். அதனை பொதுமக்கள் நம்பி தொடர்பு கொண்டு பொருட்களை வாங்க முயற்சிக்கும் போது குறிப்பிட்ட பணத்தை ஆன்லைனில் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விடுகின்றனர். அவர்களுக்கு அந்த பொருளும் கிடைக்காமல் போவதோடு, பணமும் பறிபோகிறது.
பண்டிகை கால அறிவிப்புகள்
இந்த நிலையில் தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை, தீபாவளி பண்டிகையையொட்டி இதுபோன்று ஏதேனும் அறிவிப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாறமால் இருக்க புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் கிரைம் போலீசார் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற தொலைபேசி எண் மற்றும் https://cybercrime.gov.in/என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஸ்மாா்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில் இதுபோன்ற மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.