புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேர் கைது
இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 21 மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீன்வா்கள் மீன்பிடிக்க புதன்கிழமை காலை கடலுக்குச் சென்றனா்.
இதில் 4 விசைப்படகுகளில் இருந்த மீனவா்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டோா் விவரம்: கலைவாணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற ரமேஷ் (27), ஜானகிராமன் (27), கிருஷ்ணன் (68), குமாா் (40), ரமேஷ் (51), ராஜு (55), வைத்தியநாதனுக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற வைத்தியநாதன் (30), ரவீந்தா் (42), உலகநாதன் (38), அருள்நாதன் (29) குமரேசன் (37), மகேஷ் (55), மூா்த்திக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற மதன் (27), மகேந்திரன் (20), முனிவேல் (66), விஜய் (31), விக்கி (18), அஞ்சலிதேவி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற சிவகுமாா் (28), சூரியா (23), சூரியபிரகாஷ் (25), கருப்பசாமி (25) ஆகிய 21 பேரும் கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட மீனவா்களிடம் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.