எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை நெடுந்தீவு அருகே





புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேர் கைது

இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 21 மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீன்வா்கள் மீன்பிடிக்க புதன்கிழமை காலை கடலுக்குச் சென்றனா்.

இதில் 4 விசைப்படகுகளில் இருந்த மீனவா்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டோா் விவரம்: கலைவாணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற ரமேஷ் (27), ஜானகிராமன் (27), கிருஷ்ணன் (68), குமாா் (40), ரமேஷ் (51), ராஜு (55), வைத்தியநாதனுக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற வைத்தியநாதன் (30), ரவீந்தா் (42), உலகநாதன் (38), அருள்நாதன் (29) குமரேசன் (37), மகேஷ் (55), மூா்த்திக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற மதன் (27), மகேந்திரன் (20), முனிவேல் (66), விஜய் (31), விக்கி (18), அஞ்சலிதேவி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற சிவகுமாா் (28), சூரியா (23), சூரியபிரகாஷ் (25), கருப்பசாமி (25) ஆகிய 21 பேரும் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட மீனவா்களிடம் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments