மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சி, அய்யனார்கோவில், காட்டுகொல்லை குடியிருப்பு பகுதியில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் அருணா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் தேங்காத வண்ணம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அருணா அறிவுறுத்தினார். அதனைதொடர்ந்து அறந்தாங்கி அருகே எட்டியதளி கிராமத்தில், சொட்டுநீர் பாசனம் அமைத்து பயனடைந்த விவசாயியின் தோட்டத்தினையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.