புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் 2 நாட்கள் சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதில் நேற்று நடந்த ஒத்திகையில் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான கட்டுமாவடி, விச்சூர், கோட்டைப்பட்டினம், ஏம்பக்கோட்டை, சேமங்கோட்டை, அரசங்கரை என 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, வாகனத்தின் பதிவு சரியானதாக உள்ளதா என்று சரிபார்த்த பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். கடல் பகுதிகளில் கடலோர காவல் குழுமத்தினர் ரோந்து படகின் மூலம் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் மீனவர் அடையாள அட்டை மற்றும் படகு உரிமம் உள்ளதா என்று பரிசோதனை செய்து அனுமதித்தனர். மீனவர்களிடம் சந்தேகம் படும்படி யாரும் மீன்பிடித்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார், கடலோர காவல் குழுமம், வருவாய் துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு துறையினர் என சுமார் 300 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.